Header Ads

ஒற்றை வரம் போதும்..

அவன் மனதைப் பற்றிப் பிடித்து என்னுள்ளே ஒளித்துக் கொண்டதாலோ என்னவோ
ஒருவிதமாய் என்னை எனக்குள்ளே கட்டிப்போட்டுக் கொள்கின்றான்

என்ன என்னவென்று ஆயிரம் முறை கேட்டிருப்பேன்..
காதல் தான் போடி என்று காதில் சொல்லி வெட்கித்துப் போகின்றான்

கம்பீரமும் காதலும் நிறைந்த காதலன்
கண்கள் சிரிக்க இதழ்கள் பூத்து வெட்கித்துப் போவதைக் கண்டு மயங்காமல் எப்படி இருக்க முடியும்???

இதயத்தில் மட்டும் என்று வரையறை செய்துகொண்டேன் இவனின் காதலை..
இதயம் கடந்து இதழ்கள் தாண்டி இப்படி ஆட்டிப்படைக்க எப்படி இவனால் முடிகிறது..?

கழுத்தின் வளைவுதனில் அவன் இதழ் பதிக்கும் பொழுதுகளில், என்னுள் எழும்
உணர்வுகளை எப்படியெல்லாம் விவரிக்க இயலாமல் தடுமாற்றம் கண்டேனோ...,
அவன் மீது கொண்டுள்ள காதலையும் அவ்வாறே ஒப்பித்துவிட முடியாமல் தடுமாறிப்போகின்றேன் எப்பொழுதும்😍

அவன் கண்களில் நிறைந்திருக்கும்
அந்த காதலையும்
முகமே மலர்ந்து திளைக்கும்
அந்தப் புன்னகையையும்😍
என் வாழ்நாளின் இறுதிவரையிலும் கண்டு களித்திடும் ஒற்றை வரம் போதும்
Powered by Blogger.