Header Ads

மழைநாளில் அவன்


கார்மேகம் சூழ்ந்து கடுங்குளிர் உடலேறி
மழையது மண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கும் வேளையிலே
பாதியாய் நனைந்து மீதியாய் என்னைத்தேடி வந்திருந்தான் #அவன்

தலைதுவட்டும் பொழுதிலே தடுமாறிப்போயிருந்தேன்..
அவன் அறிந்தானோ இல்லையோ
அதை நான் அறியேன்....


மழை வந்து இனிமை சேர்த்த மாலைப்பொழுது
அவன் மார்பில் தலை சாய்த்த தூக்கத்துடன்
கடந்து போயிற்று.

தூக்கத்தின் போதும் எத்தனை கவனம்..
கண்விழித்துப் பார்க்கும் போதும் தாங்கிக்கொண்டுதான் இருந்தான் அவன் கண்மூடிய தூக்கத்திலே..😍

குளிரைப் போக்க பறிமாறிக் கொண்டதெல்லாம் ஒற்றைக் கோப்பை தேநீர் மட்டும் தான்...
தேநீர் முடிந்தும் காதல் மிச்சமாய் இருந்தது இருவரிடத்திலும்...

கவனமும் கரிசனமுமாய் இத்தனைக் காதலா.... எப்படி முடியும் எனும் வினாவிற்கு பதில் இன்னும் கிட்டவில்லை...

அதை எனக்காக கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துவைக்கின்றேன்....
நான் எழுதாக் காதலும் உண்டு அவனிடம்..
எழுதிவிட்டால் இன்பபோதை தீர்ந்துவிடுமோ என்னமோ🤔🤔
Powered by Blogger.